கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்.........!

        கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்.........!






கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்.........!



   

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்.........!


கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு


கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 


பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், சிறுமி பயின்ற பாடசாலை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரும் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜரானபோது இந்தத் தகவல் வழங்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்தார்.


அன்று ஆணையத்தில் ஆஜராகாத சிறுமியின் பாடசாலை அதிபர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களைக் கேட்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 


மேலும், சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு தனது பரிந்துரைகளை வழங்குவதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்.........!

No comments

Theme images by fpm. Powered by Blogger.