விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்...............!

       விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்...............!










விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்...............!




  


  விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்...............!




ஏர் இந்தியா விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்.



குஜராத் மாநிலம் அகமதபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர்-இந்தியா விமானம் இன்று (12) குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இந்தியாவின் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 244 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், 07 போர்ச்சுகல்காரர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் பயணித்துள்ளனர். இது தவிர, இரு பைலட்டுகள், 10 சிப்பந்திகளும் விமானத்தில் இருந்துள்ளனர். விபத்தில், 133 பேர் வரை இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


 காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. அகமதாபாத் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.



குறித்த விமானத்தை கேப்டன் சுமீத் சுபர்வால் இயக்கியுள்ளார். இவர், 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவத்தை கொண்டவராவார். துணை பைலட் கிளைவ் குந்தார் 1,100 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் மிக்கவர். விமானம் 800 அடி உயரத்திலிருந்து கீழே நோக்கி வர தொடங்கியுள்ளது.


 விமானத்தினுடைய லேண்டிங் கியர் மீண்டும் விமானத்துக்குள் இழுக்கப்படவில்லை. இதனால், விமானம் பறக்க தொடங்கியதும் ஸ்டால்லிங் எனப்படும் காற்று முட்டுக்கட்டை காரணமாக திணறத் தொடங்கி இருக்கலாம். இச்சமயத்தில் விமானம் மேற்கொண்டு பறக்க தேவையான த்ரஸ்ட்டை கொடுக்க விமானிகள் தவறியுள்ளதாகவும் விமானத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதே வேளையில், விமானம் மேலே எழும்பிய சில நிமிடங்களில் என்ஜீன்கள் சக்தியை இழந்ததாகவும் சொல்கிறார்கள்.


விபத்தையடுத்து, உறவினர்களை தேடி அகமதாபாத் விமான நிலையத்திலும், மருத்துவமனைகளிலும் உறவினர்கள் அலை பாய்ந்து கொண்டு வருகின்றனர். இந்த விமானம் 2009 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த 06 மாதத்துக்கு முன்பும் பழுதாகியுள்ளது. இந்த விமானம் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கு 300 பயணிகளுடன் பயணிக்க தயாராக இருந்தது.


 அப்போது, கடைசிக்கட்டத்தில் விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். இதனால், 300 பயணிகள் உயிர் தப்பினார். பின்பு கோளாறு நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் அகமதாபாத் - லண்டன் மார்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.


இந்தியாவில் நடந்த 02 வது மிகப் பெரிய விபத்து இதுவென்று கூறப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் மோதிக் கொண்டது. ஹரியானாவில் சார்கி தத்ரி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 349 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




 விமான விபத்து: முழுக் கதையும் இதுதான்.


No comments

Theme images by fpm. Powered by Blogger.