டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!
டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!
இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் பிரிவு 69Aன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடியும் வரை தடை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவும் டெங்கு: அதி-அபாய வலயங்கள் 84 ஆக அதிகரிப்பு!
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் தற்போது ஒரு பாரிய தொற்றுநோய் மட்டத்திற்கு தீவிரமடைந்துள்ளதாக நிர்வாக சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருந்த 74 டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை, தற்போது 84 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக பின்வரும் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் மிக அதிவேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது:
கொழும்பு, கம்பஹா, களுத்துறை,காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருநாகல், புத்தளம் ,இரத்தினபுரி, கேகாலை ,கண்டி, மாத்தளை , மட்டக்களப்பு, பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் இந்த டெங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாடசாலை வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பெற்றோர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வேகமாக பரவி வரும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (ஜூன் 15) ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினமும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி வைத்தியசாலை வளாகத்தில் திடீரென பற்றி எரிந்த
காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ பரவல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய்
வளைகுடாப் பிராந்தியப் பதற்றங்கள் தணிந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரத்தன்மையடைந்துள்ள நிலையில், அதன் உண்மையான இலாபத்தை உடனடியாக நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.இந்த அரசாங்கம் போர் தொடங்கிய ஆரம்பத்தில், 35 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு நம்மிடம் உள்ளதாகக் கூறியது. ஆனால், அடுத்த ஏழே நாட்களுக்குள் எண்ணெய் விலையை உயர்த்தியது.
இதன் மூலம் அவர்கள் ஒரு பெருந்தொகையான மேலதிகப் பணத்தை ஈட்டியிருப்பார்கள். எனவே, தற்போது எண்ணெய் விலை குறைந்திருப்பதால், மார்ச் மாதத்தில் மக்கள் பணமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்தப் பழைய பெருந்தொகைப் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கி, இந்த எண்ணெய் விலையைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், எண்ணெய் விலை இதே மட்டத்தில் நீடிப்பதைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டண திருத்தம் ஒன்றினை மேற்கொண்டு அது தொடர்பிலும் புதிய தீர்மானம் ஒன்றினை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.
ஏனெனில், இந்த அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவும், அதேபோல் டீசல் ஊழல் காரணமாகவும் பெருமளவிலான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது.
இப்பொழுதாவது மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில், எண்ணெய் விலையைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!
No comments