அவசர எச்சரிக்கை ....!
அவசர எச்சரிக்கை ....!

அவசர எச்சரிக்கை ....!
கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்கு பதிலாக நேரடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 1292 உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துகளினால் 1357 பேர் உயிரிழந்துள்ளனர். அதே காலப்பகுதியில் 2512 பாரதூரமான விபத்துகளும், 5059 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 467 பாதசாரிகளும், 465 உந்துருளி செலுத்துநர்களும் அடங்குவதாக பொலிஸ் தரவுகள் தெரிவித்துள்ளன.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவையே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டை இல்லாததால் தங்களது முதியோர் உதவித்தொகையை இழந்த, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்காக சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளன.
அதன்படி, ஒரு மூத்த குடிமகன் தேசிய அடையாள அட்டை இல்லாததால் தனது முதியோர் உதவித்தொகையை இழந்திருந்தால், கிராம அலுவலர், சமூக மேம்பாட்டு அலுவலர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலரை சந்திக்குமாறு தேசிய முதியோர் செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய முதியோர் செயலகம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகையை வழங்குகின்றது.
தற்போதைய அரசாங்கம், ரூ. 3,000 ஆக இருந்த இந்த உதவித்தொகையை ரூ. 5,000 ஆக உயர்த்தவும், உதவித்தொகை பெறத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த முதியோர் உதவித்தொகை தற்போது 698,790 மூத்த குடிமக்களுக்கு 'அஸ்வெசும' கணக்குகள் மூலமாகவும், 232,496 பேருக்கு தபால் நிலையங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
கூர்மையான ஆயுதத்தால் குத்தி இளைஞர்
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹக்குருவெலவை சேர்ந்த 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயது சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவன் விபத்தில் பலி! பொலிஸார் வெளியிட்ட காரணம்
பிலியந்தலை - மகரகம பிரதான வீதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அரவ்வல பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒன்று, பிலியந்தலை - மகரகம வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, தனக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை அதிவேகமாக முந்திச்செல்ல முயன்றுள்ளது.
இதன்போது, எதிர்பாராத விதமாக எதிரே அதிவேகத்துடன் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பம் ஒன்றிலும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடல் பாகங்களில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 16 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேவேளை, விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிவேகம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த இளம் உயிர் பறிபோயுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவசர எச்சரிக்கை ....!
No comments