வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்!
வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்!
வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்!
வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்!
இந்தியா உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி என்று கூறி, ஊழியர் ஒருவர் மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த அப்பெண்ணை குறித்த ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றத.
22 ஆம் திகதி டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் சிறிய அளவிலான அதிர்வு உணரப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
யாழ் (Jaffna) வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.
இதனால் நாளாந்தம் தமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவும் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைப்படகுளின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறை பகுதி கடற்றொழிலாளர்களது வலை…
பட்டங்கள் பறப்பதற்கு தடை...
நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு அருகில் பறக்கவிடப்படும் பட்டங்களின் விடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, விமான விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னதாக, விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் லிமிடெட் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வானில் பறந்த உணவுகள்
காசாவிற்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பி வைத்துள்ள செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
உணவுக்காக ஏங்கும் காசா மக்களின் நிலை கண்டு, ஐக்கிய அரபு இராச்சியம் இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளது.
அதற்கமையய காசாவிற்கு 25 தொன் நிறைகொண்ட உணவுப் பொருட்கள் அடங்கிய விமானம் இன்று புறப்பட்டுள்ளது.
பல காலமாக காசா மீது இடம்பெற்று வரும் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பசி பட்டினியால் குழந்தைகள், பெண்கள் முதல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் காசா மக்களுக்கு உணவு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் தோல்வியில் முடிந்தது.
எவ்வழியில் காசா மக்களுக்கு உணவு வழங்கலாம் என்று சிந்தித்த தருணம், அண்மையில் எகிப்திலிருந்து போத்தல்களில் உணவுகள் அடைக்கப்பட்டு கடல் வழியாக காசாவிற்கு அனுப்பப்பட்டது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு மக்களை ஈர்த்தது.
அதனையடுத்து இதேபோன்று மக்களை நெருடும் வகையில் மீண்டும் காசாவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடல் வழியை எகிப்து தேர்ந்தெடுத்ததால் ஐக்கிய அரபு வான்வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு விமானம் மூலம் உணவுகள் அடங்கிய பொதிகளை ஐக்கிய அரபு காசா மக்களுக்காக அனுப்பி வைத்துள்ளது.
காசா மக்கள் மீது கரிசனை கொண்டு மனிதநேயத்தோடு தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்!
No comments