மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -- கடவுச்சொற்களை பகிர வேண்டாம்..!
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -- கடவுச்சொற்களை பகிர வேண்டாம்..!
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -- கடவுச்சொற்களை பகிர வேண்டாம்..!
இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.
AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூளை பாதிப்பை ஏற்படுத்தும் -- ஒரு பிரபலமான இனிப்பான்
சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரத்த சர்க்கரை மற்றும் கலோரிகளில் அதன் குறைந்தபட்ச தாக்கம் காரணமாக, Erythritol பெரும்பாலும் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி இது ஒரு ஆபத்து சுயவிவரத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இந்த சமீபத்திய ஆராய்ச்சி கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வாகும், அங்கு ஆராய்ச்சியாளர்கள் Erythritol கொண்ட குளிர்பானங்களை குடித்த பிறகு பல மூளை செல்கள் எவ்வாறு தோன்றின என்பதைக் கவனித்தனர்.
மூளையில் இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை பின்னர் அதிகரிக்கக்கூடிய செல் சேதத்தின் சங்கிலி எதிர்வினை ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Erythritol கொண்ட உணவுகள் சந்தையில் பொதுவாகக் காணப்படுவதாகவும், அவற்றின் நுகர்வு குறைக்கப்படுவது நல்லது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கணினி அவசர தயார்நிலை குழுவின் எச்சரிக்கை...
இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
தெரியாத இணைப்புகளை அழுத்தி உட்செல்ல வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) குறிப்பிட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பெருந்தொகை ஓய்வூதியம்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை எண் 44/90 இன் கீழ் ஓய்வு பெற்றர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 90% ஓய்வூதியம், சுற்றறிக்கை விதிகளின்படி இருபது ஆண்டுகளாகப் வழங்கப்படவில்லை என்று ஓய்வூதியதாரர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
1991.01.01 முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு குழுவினர் 2004 முதல் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அமைப்பின் நிர்வாகச் செயலாளர் டி. லக்ஷ்மன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
06/2004, 2/2006, 16/2015, 14/2019(i) ஆகிய சுற்றறிக்கைகளின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஓய்வூதிய வீதங்கள் இந்த ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய உரிமையை 80% ஆகக் குறைத்துள்ளதாக நிர்வாகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
18.10.1990 திகதியிட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை எண் 44/90 இன் கீழ், இந்த ஓய்வூதியதாரர்கள் 1.1.1991 முதல் 31.12.2003 வரை தங்கள் சம்பளத்தில் 90% பெற உரிமை பெற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்து வருட சேவையை முடித்த ஆனால் இருபது வருட சேவையை முடிக்காத ஓய்வூதியதாரர்கள் சுற்றறிக்கை விதிமுறைகளின்படி தங்கள் கடைசி மாத சம்பளத்தில் 90% பெற உரிமை பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக 2004 முதல் ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பான அதிகாரிகளுக்கும் 120 க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை எனவும் லக்ஷ்மன் பீரிஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 2025.04.19 அன்றும், அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு 2025.04.26 அன்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக நிர்வாகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் தீர்மானத்தால் நாட்டில் ஏற்படவுள்ள கடும் நெருக்கடி
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய பயிர்ச்செய்கையில் இருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் குறித்த இரண்டு சாகுபடியில் இருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -- கடவுச்சொற்களை பகிர வேண்டாம்..!
No comments