பொலிஸ் எச்சரிக்கை -- வாட்ஸ்அப் மோசடிகள் !

பொலிஸ் எச்சரிக்கை  --  வாட்ஸ்அப் மோசடிகள் !




பொலிஸ் எச்சரிக்கை  --  வாட்ஸ்அப் மோசடிகள் !




பொலிஸ் எச்சரிக்கை  --  வாட்ஸ்அப் மோசடிகள் !




பொலிஸ் எச்சரிக்கை  --  வாட்ஸ்அப் மோசடிகள் !



வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது தொடர்பான மோசடி பரிவர்த்தனைகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது.



இந்த வழக்கில், இந்த மோசடி செய்பவர்கள் பயனரை ஏமாற்றி அவர்களின் வாட்ஸ்அப் OTP எண்ணைப் பெறுகிறார்கள், பின்னர் மோசடி செய்பவர்கள் அந்தக் கணக்கைக் கைப்பற்றி, பயனரின் கணக்கில் உள்ளவர்களுக்கு போலி செய்திகளை அனுப்பி பணத்தை மோசடி செய்கிறார்கள் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் ஆன்லைன் கணக்குகளின் OTP எண்களை வேறு யாருக்கும் வழங்க வேண்டாம் என்று பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.




சவுதி பூங்காவில்  விபத்து – 23 பேர் காயம்



சவுதி அரேபியாவின் தைஃப்பின் அல் ஹடா பகுதியிலுள்ள  பொழுதுபோக்கு பூங்காவிலிருந்த இராட்டின சவாரி ஒன்று பழுதடைந்து இரண்டாக உடைந்ததில்  23 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  


காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகள் விரைவாக பதிலளித்தாகவும் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோளாறுக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவசர விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எதிர்கால இராஜதந்திரிகளை உருவாக்கும் முயற்சி


கொழும்பு 03 இல் அமைந்த மஹாநாம கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு 29ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம், ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.


பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, மாணவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல், அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு செயல்படும் இராஜதந்திரிகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நேர்மையான, சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ஜி.ஜி.எஸ்.சி. ரோஷன், மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் நாடு முழுவதும் விரிவடைந்து மாணவர்களுக்கு பயனளிப்பதாகவும் குறிப்பிட்டார்.


பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர் பாராளுமன்றம் மாணவர்களின் ஆளுமை மற்றும் திறன் வளர்ச்சிக்கு முக்கியமானது என பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.


மஹாநாம கல்லூரி அதிபர் ஐ.விதானகே, இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்கு அவசியமானவை எனக் கூறினார். அமர்வின்போது, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து, தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்களை முன்மொழிந்தனர். இறுதியாக, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் ஜானகி மதவனாராச்சி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.




கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு





பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக விடுதிப் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறையுடன் இணைந்து விடுதிக் கட்டிடங்களைக் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கல்வித் பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.





வீடுகளுக்கு நில அளவை வரைபடங்களை  விநியோகிக்க நடவடிக்கை


இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை உங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று அளவையாளர் நாயகம் வை.ஜீ.ஞானதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

"இதுவரை, நாங்கள் அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை வழங்கி வந்தோம். ஆனால் இப்போது பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை இணையவழியில் (Online) பெறுவதற்கான வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அவர்கள் இணையவழி ஊடாக பணம் செலுத்தி, தங்களுக்குத் தேவையான நிள அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்." 

அத்தோடு, பொதுமக்களுக்கு நிலம் சார்ந்த தகவல்களை இணையவழியில் வழங்குவதற்கான நடவடிக்கைளில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.



பொலிஸ் எச்சரிக்கை  --  வாட்ஸ்அப் மோசடிகள் :!

No comments

Theme images by fpm. Powered by Blogger.