மாணவருக்கு பட்டம் பெற அனுமதி மறுப்பு....

 மாணவருக்கு பட்டம் பெற அனுமதி மறுப்பு....




மாணவருக்கு பட்டம் பெற அனுமதி மறுப்பு....







மாணவருக்கு பட்டம் பெற அனுமதி மறுப்பு....


பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யுஜிசி) தனது இயலாமையின் அடிப்படையில் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற அனுமதி மறுத்ததால், தனது அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, பண்டாரவளையைச் சேர்ந்த ஒரு இளம் மாணவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


இந்த மனுவை பண்டாரவளையைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவரே தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் பிரதான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மனுதாரர், தான் பண்டாரவளை பிரபல பாடசாலையொன்றில் தொழில்நுட்பப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்ற ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் என்றும் 2024/2025 கல்வியாண்டிற்கான தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த போதிலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவின் கீழ் அத்தகைய பட்டப்படிப்பைப் படிக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


யுஜிசியின் முடிவால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்துகிறார்.


மேலும், தொழில்நுட்பத்தில் பட்டம் பெற வாய்ப்பளிக்கும் உத்தரவை அவர் கோருகிறார், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர ஒரு தேசிய கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் கோருகிறார்.






சட்ட விரோதமாக மருந்தகம் நடத்திய நபருக்கு அபராதம் விதிப்பு....

  

சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மருந்தகம் வைத்திருந்த குற்றச்சாட்டில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை குறித்த நபரை கைது செய்து இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.


ராஜகிரிய பகுதியில் உள்ள மொரகஸ்முல்லவில் வசிக்கு ஒருவர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்தகம் நடத்துவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு நீதிவான் சந்தேகநபருக்கு 25,000ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.






இன்று மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை ஆரம்பம்....

   

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை அமர்வுகள் நேற்று (18) தொடங்குகியது.


இலங்கை மின்சார சபையானது 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. 


இத் திருத்தங்கள் தொடர்பிலான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆணைக்கழு தீர்மானித்துள்ளது. 


அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாகவும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாய்மொழி கருத்துக்களைப் பெற ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகள் நடத்தப்படும்.


அதன்படி, வாய்மொழி கருத்துக்களைப் பகிர்வதற்கான அமர்வுகள் இன்று தொடங்குகிறது.


2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அக்டோபர் 7, 2025க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று PUCSL மேலும் தெரிவித்துள்ளது:


மின்னஞ்சல் - info@pucsl.gov.lk

வட்ஸ்அப் - 0764271030

பேஸ்புக் - www.facebook.com/pucsl

தபால் மூலம் - 

மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை - 2025

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு, 6ஆவது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு -03.











வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு...


இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உரிமைகளை மட்டுமே அரசு பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, முந்தைய அரசு இயற்றிய சட்டத்தின் கீழ், இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் இறுதிக்குள் பணிநீக்கம் செய்யப்படவிருந்ததாக கூறினார்.

எனினும், தற்போதைய அரசு அந்தச் சட்டத்தை இடைநிறுத்தி, மாற்று சட்டமொன்றை அறிமுகப்படுத்தியதாக அவர் விளக்கினார்.

“சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், நாங்கள் அதை நிறுத்தினோம். மின்சாரத் துறையைப் பாதுகாத்து, அதை சுயாதீனமாக இயங்க வைக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். மின்சார சபை ஊழியர்களிடம் நான் கேட்கிறேன், பழைய முறைமையை திருத்துவது குற்றமா? வேலைநிறுத்தம் செய்வது பிரச்சினையா? பழைய முறைமையை திருத்துவது உங்கள் உரிமைகளை மீறுவதாக உள்ளதா? இல்லை. இதன் மூலம், உங்கள் உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட விரும்புவோரை சவால் விடுத்த அவர், “இப்படி வேலை செய்ய முடியாது,” என்று கூறினார்.

“நாங்கள் மின்சார சபையை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். ஊழியர்களுக்கு, எந்தப் பிரிவில் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்ய இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் பணியாற்ற விரும்பாதவர்களுக்கு, இழப்பீடு பெற்று வெளியேறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.












சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் 1,600 பேர் உயிரிழப்பு..
    

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்.

அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் இரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. வைட்டமின் டி அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.











ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்



இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 செப்டம்பர் 5, அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு செய்து, கையும் களவுமாக சிக்கிய அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் புகைப்படத்துடன் "நம்பர் 1 ரசிகன்" என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி, குறித்த  இளைஞன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் விலங்கு உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்து பரவலான விவாதங்களை எழுப்பியுள்ளது.






மாணவருக்கு பட்டம் பெற அனுமதி மறுப்பு....


No comments

Theme images by fpm. Powered by Blogger.