வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள் --- நாட்டில் அதிகரிப்பு ........ - !

வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள்  ---   நாட்டில் அதிகரிப்பு ........ - !





வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள்  ---   நாட்டில் அதிகரிப்பு ........ - !





வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள்  ---   நாட்டில் அதிகரிப்பு

    


வட்ஸ் அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


மலிவு விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது எனும் போர்வையில் வட்ஸ் அப் கணக்குகளுக்கு ஊடுருவல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.


இதன் மூலம் குழுவிலுள்ள ஏனையவர்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.


ஒருவரின் வட்ஸ் அப் கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்புகொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மோசடி தொடர்பிலான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. 



கட்டுநாயக்க - கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்...

    


பேர வாவியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (03) நடைபெற்றது.


சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாகவும் இந்த கொழும்பு - கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


தற்போது இலங்கையில் நீர் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் சினமன் எயார் லைன்ஸ், இந்த கொழும்பு - கட்டுநாயக்க விமானப் பயணங்களை மேற்கொள்ளும். இந்த புதிய விமான சேவையின் ஊடாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.



இந்​தியா - சீனா இடையே   ----   நேரடி விமான சேவை...

   


இந்​தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26ஆம் திகதி முதல் தொடங்​கப்​படு​கிறது.


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்​தில் இந்​தியா - சீனா இடையே விமான சேவை இரத்து செய்​யப்​பட்​டது. அதே ஆண்டு ஜூன் 15ஆம் திகதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா - சீனா இராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர். இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்பட்​டது.


கொரோனா பெருந்​தொற்​றுக்கு பிறகு உலகம் முழு​வதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்​பியது. ஆனால், இந்​தியா - சீனா இடையே மீண்​டும் நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. சர்​வ​தேச அரங்​கில் இரு நாடு​களும் எதிரும் புதிரு​மாக செயல்​பட்டு வந்​தன. கடந்த மே மாதம் இந்​தியா - பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது. அப்​போது​கூட பாகிஸ்​தானுக்கு இராணுவ ரீ​தி​யாக சீனா பல்​வேறு உதவி​களை செய்​தது.


இந்த நிலை​யில், அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்கை சர்​வ​தேச அளவில் பல மாற்​றங்​களை ஏற்​படுத்​தி​யது. ரஷ்​யா​விடம் இருந்து மசகு எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி இந்​திய இறக்​குமதி பொருட்​களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்​தார். அமெரிக்​கா​வின் புதிய வரி விகிதம் கடந்த ஒகஸ்ட் மாதம் அமலுக்கு வந்​தது.


இந்த சூழலில் இந்திய ஜனாதிபதி திர​வுபதி முர்​முவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங் சமீபத்​தில் இரகசிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார். அதில், ‘சர்​வ​தேச விவ​காரங்​களில் இந்​தி​யா​வும், சீனா​வும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். எல்​லை​யில் அமை​தியை ஏற்​படுத்த வேண்டும். அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு போரை தடுத்து நிறுத்த வேண்​டும்’என்று அழைப்பு விடுத்​திருந்​தார்.


மேலும், ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு பிரதமர் மோடிக்கு சீன ஜனாதிபதி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்​றுக்​கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஒகஸ்ட் இறு​தி​யில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய மோடி, “இந்​தி​யா​வும் சீனா​வும் கூட்​டாளி​கள்தான், எதிரி​கள் அல்ல” என்று கூறியுள்ளார். இதே கருத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கும் வழிமொழிந்​தார்.


உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரதமர் மோடி​யும், ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கும் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது மீண்​டும் நேரடி விமான சேவையை தொடங்​க​ முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்தா - சீனா​வின் குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது.


‘இரு நாடு​களின் விமான போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் சமீபத்​தில் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் எட்​டப்​பட்ட முடி​வின்​படி, அக்​டோபர் இறு​தி​யில் இரு நாடு​கள் இடையே நேரடி விமான சேவை தொடங்​கப்​படு​கிறது’ என்று மத்​திய வெளி​யுறவுத் துறை தெரிவித்துள்ளது.


மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 


கொரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு முன்​பாக இந்​தியா - சீனா இடையே மாதம்​தோறும் 539 நேரடி விமான சேவை​கள் இயக்​கப்​பட்டு வந்​தன. எயார் இந்​தி​யா, சீனா சதர்ன் எயார்லைன்​ஸ், சீனா ஈஸ்​டர்ன் எயார்லைன்ஸ் நிறு​வனங்​கள் பயணி​கள், சரக்கு விமானங்​களை இயக்கியுள்ளன. இதன்​ மூலம் மாதம்​தோறும் இரு நாடு​களை சேர்ந்த 1.25 இலட்​சம் பேர் விமான பயணம் மேற்​கொண்​டனர்.


கொரோனா காலத்​தில் விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதன்​பிறகு, சீனா செல்ல வேண்​டிய இந்​திய விமான பயணி​கள் பங்களாதேசம், ஹாங்​காங், தாய்​லாந்​து, சிங்​கப்​பூர் வழி​யாக சீன நகரங்​களுக்கு சென்​றனர். சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்​கின் கடிதம் காரண​மாக இந்​தி​யா, சீன உறவில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யுள்​ளது. படிப்​படி​யாக டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் இருந்​தும் சீன நகரங்​களுக்கு விமான சேவை தொடங்கப்படும்.


இதே​போல சீன தலைநகர் பெய்​ஜிங், அந்த நாட்​டின் வர்த்தக தலைநகர் ஷாங்​காய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​தி​யா​வுக்கு விமான சேவை​கள் தொடங்​கப்​படும். தற்​போது டெல்​லி​யில் இருந்து வேறு நாடு​கள் வழி​யாக பெய்​ஜிங் செல்ல ரூ.20,000 வி​மான கட்​ட​ணம் வசூலிக்கப்படு​கிறது. நேரடி வி​மான சேவை தொடங்​கப்​படு​வ​தால் இந்த கட்​ட​ணம் 20 சதவீதம் வரை குறை​யும்​. பயண நேர​மும்​ குறை​யுமென தெரிவித்துள்ளது.



வடிகாணில் இருந்து புதிதாகப் பிறந்த சிசு ஒன்று மீட்பு



மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், 


புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.


சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கிடையில், இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் வயதுடைய சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள  மாற்றம்




சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.


இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்வைக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


சாரதி அனுமதி பத்திரங்களைப் பெறும்போது விண்ணப்பதாரர்களின் வயது மற்றும் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


போக்குவரத்து அமைச்சு

நடுத்தர வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்ற காலத்திற்கு செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


எனினும், இது ஒரு முடிவு அல்ல, ஒரு திட்டம் மட்டுமே என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது கனரக வாகன ஓட்டுநர்களுக்குப் பொருந்தாது. கனரக வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் தங்கள் சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


மருத்துவ உடற்தகுதி சான்றிதழ்

மேலும், ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு அவசியமான தேசிய போக்குவரத்து மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


உடற்தகுதி சான்றிதழை ஒன்லைன் டிஜிட்டல் அமைப்பு மூலம் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


உடற்தகுதி சான்றிதழை அச்சிடுவதற்கு அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் ரூபாய் செலவிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





வட்ஸ் அப் (WhatsApp) மோசடிகள்  ---   நாட்டில் அதிகரிப்பு ........ - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.